சூப்பர் ஸ்டாருடன், சூர்யா பட நடிகை.! திடீர் சந்திப்பால் திக்குமுக்காடிய பிரபலம்.!
Soorarai potru fame abarna murali took selfi with super star rajini
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாத இந்திய சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி மொழிகளில் இருக்கக்கூடிய முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்தளவில் ஏற்பட்டிருக்கிறது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி தற்போது படக்குழுவினர் கேரள மாநிலம் கொச்சியில் ஜெயிலர் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகளை தொடங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கொச்சியில் நடைபெறுவதால் அந்தப் படப்பிடிப்புகளுக்காக கொச்சின் சென்று இருக்கிறார் சூப்பர் ஸ்டார். அப்போது விமானத்தில் வைத்து அவரை சந்தித்த அபர்ணா முரளி சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் 'ஃபேன் கேர்ள் மொமென்ட்' என்ற அடைமொழியுடன் பகிர்ந்திருக்கிறார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. இவர் சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Soorarai potru fame abarna murali took selfi with super star rajini