சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் - ஷாக் கொடுத்த இமான்
Sivakarthikeyan committed biggest betrayal to me Iman
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு துரோகத்தை செய்து விட்டதாக இசையமைப்பாளர் டி. இமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் இசையமைப்பாளர் டி. இமான் பணியாற்றினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் திரை உலகில் அறிமுகமானது முதல் இசையமைப்பாளர் இமான் பல ஹிட் பாடல்கள் வழங்கி அவரின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.
அது மட்டும் இன்றி நடிகர் சிவகார்த்திகேயனை பாடகராகவும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்பாளர் இமானும் நடிகர் சிவகார்த்திகேயனும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற வில்லை.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் டி. இமான் பதிலளித்தார். அதில், ''சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து மீண்டும் பணியாற்றுவது மிக கஷ்டம்.
அவரது படங்களில் வரும் காலங்களில் நான் பணியாற்ற மாட்டேன். எனக்கு அவர் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்.
அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அப்படி நான் வெளியே சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
என் வாழ்க்கையில் வந்த துன்பங்களுக்கும் வலிகளுக்கும் முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் மட்டும்தான். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக பழகியதால் அவர் செய்த துரோகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை'' என பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இமானின் இந்த பேட்டி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது. மேலும் இணையதளத்தில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
English Summary
Sivakarthikeyan committed biggest betrayal to me Iman