செம்பருத்தி சீரியல் நடிகருக்கு பிறந்த குழந்தை.. என்ன குழந்தை பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களில் முக்கியமானது செம்பருத்தி. இதில் ஆதி என்ற கதாபாத்திரத்திற்கு தம்பியாக அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் நடித்திருப்பார். இவர் தொகுப்பாளராக தனது சினிமா வாழ்க்கை பயணத்தை துவங்கி தற்போது முன்னணி சீரியல் நடிகராக உயர்ந்துள்ளார்.

உள்ளூர் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தனது சுறுசுறுப்பான பேச்சால் நிறைய இளம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் சிறப்பாக நடனம் ஆட கூடியவர். ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

இதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கின்ற வாய்ப்பு கதிருக்கு கிடைத்தது. தற்போது அவர் ஜில் ஜங் ஜக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். அதன் பின் மாஸ்டர் தி பிளாஸ்டர் என்ற நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார்.

இவருக்கு கடந்த 2020இல் சிந்து என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது கதிருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
வாழ்த்துக்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sembaruthi Serial Kathir Has baby of daughter


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->