சினிமாவை விட்டு விலக முடிவு.. சமந்தாவால் கதிகலங்கும் படக்குழு.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணியின் நடிகையாக இருந்து வருபவர் தான் சமந்தா. இவருக்கு தசை அலர்ஜி நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் காரணமாக, சமந்தாவால் கமிட் ஆன படங்களில் கூட கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. 

அவர் புதிதாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருக்கின்றார். அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வந்த குஷி திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் 60% நிறைவடைந்து விட்டது. 

அடுத்த மாதம் படப்பிடிப்பை துவங்க பட குழு திட்டமிட்டது. அதில் சமந்தா குறித்த காட்சிகளை மட்டும் படமாக பட குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சமந்தா ஹிந்தியில் இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் பட குழுவும் சமந்தாவை ஷூட்டிங் இருக்கு அழைத்துள்ளது. இருப்பினும் தனது நோயின் காரணமாக சமந்தாவால் எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை. 

எனவே இந்த பிரச்சனைகள் சரியாகும் வரை எதிலும் கலந்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். குணமடைந்த பிறகு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி ஓய்வெடுக்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் கமிட்டான படங்களில் வேறு நடிகைகளை கமிட் செய்ய பட குழு ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha may Leave From Cinema


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->