விஜய் வீட்டில் என்ன தான் பிரச்சனை.. எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜயை சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். முதல் படத்தில் விஜய்க்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் விடா முயற்சியால் விஜய் முன்னணி ஹீரோவாக மாற்றினார்.

சமீப காலமாக விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே பிரச்சனைகள் எழுந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. விஜய் பெயரில் அவரது அனுமதியே இல்லாமல் கட்சி துவங்கியதாக வழக்கு வரை சென்று விபரீதமாகியது. இதன் காரணமாக, சமீப காலமாகவே இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், எஸ் ஏ சந்திரசேகர் எப்போதும் தனது மகன் விஜய் குறித்து பேசிக்கொண்டு இருப்பார். சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ் ஏ சந்திரசேகரிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "எல்லோர் வீட்டிலும் நடப்பது போல் தான் எங்கள் வீட்டிலும் பிரச்சனை நடக்கிறது.

இது ஒன்றும் புதிதல்ல. தந்தை மற்றும் மகனுக்கு இடையில் இருக்கும் பனிப்போர் வழக்கமானது தான். விஜய்க்காக எப்பொழுதும் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். எனது ஆசை எப்பொழுதும் என் மகனுக்கு இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sac About Hus family issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->