குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.! இன்றைய புரோமோ வெளியீடு.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

தற்போது மொத்தம் 18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, பாவனி, சிபி, தாமரை, நிரூப், ப்ரியங்கா, சஞ்சீவ், அமீர் உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த வாரம் டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இதில், ப்ரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது போல புரோமோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த புரோமா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka and thamarai fight in biggboss house


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->