என்ன தான் ஆச்சு.? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகும் இன்னொரு முக்கிய கதாபாத்திரம்.! ரசிகர்களுக்கு ஷாக்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடர் நீண்ட காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் ஒன்றாகும். இந்த தொடர் வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

ஊருக்கே ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நடந்து கொள்ளும் அண்ணன் தம்பிகள் நான்கு பேர் எந்த பிரச்சனைகள் வந்தாலும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால் தற்போது ஆளுக்கு ஒரு திசையாகசையாக பிரிந்து சென்று விட்டார்கள். முல்லையின் வளைகாப்பின் போது அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த தொடரின் ப்ரோமோவில் கூட அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் ஒன்றாக ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வருவது போன்ற காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் நான்கு பேரும் ஒன்றிணைவதை  பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவணா விக்ரம் என்பவர் இந்தத் தொடரிலிருந்து திடீரென விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்திகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandian Stores is a shock to the fans as the lead character quits the serial


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->