லியோ குறித்து புதிய சர்ச்சை: காவல் ஆணையரிடம் புகார் அளித்த நடனக் கலைஞர்கள்! - Seithipunal
Seithipunal


லியோ படத்தில் நடனமாடிய கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் தரவில்லை என புகார் எழுந்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் 'நான் ரெடி தான்' என்ற பாடலில் பங்கேற்ற 1300 நடன கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் தரவில்லை என நடன கலைஞர்கள் ஒன்று சேர்ந்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர். 

இந்தப் பாடலின் படபிடிப்பு முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் தங்களில் பலருக்கும் சம்பளம் தரவில்லை. கொடுக்கப்பட்ட சம்பளமும் பேசியபடி வழங்கப்படவில்லை. 

தயாரிப்பு தரப்பும் யூனியனும் தங்களை அலைய வைப்பதாக நடன கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன் தங்களுக்கு வர வேண்டிய ஊதியத்தை முழுமையாக கிடைக்க வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo movie Dancers complained Police Commissioner


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->