பள்ளி சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்.. ஆசிரியர்கள் செயலால்..கொந்தளிக்கும் பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


பள்ளி வளாகத்திற்குள் வெறிநாய் புகுந்து எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடித்து குதறியதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசம்பட்டி அருகே அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆஷினி என்ற 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சிறுமி பள்ளி வளாகத்தில் நடந்து சென்றபோது அப்பகுதியை சேர்ந்த வெறிநாய் ஒன்று வளாகத்தில் புகுந்து சிறுமியை கடித்து குதறியுள்ளது. இதில், அந்த சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்பொழுது நாய் கடித்து குதறிய போது எந்த விதமான உதவியும் செய்யாமல் ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக மற்ற மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

இத்தகைய நிலையில், சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டு கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. நாய் கடித்த போது எந்த விதமான உதவியும் செய்யாத ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri 8th std School girl Bites By Dog in School


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->