"அதுல என்ன நடந்ததோ...." 2024 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல்... கருத்துக் கணிப்பைவெளியிட்ட கங்கனா ரனாவத் - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் கங்கனா ரனாவத். தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

வலதுசாரி அரசியல் சிந்தனை கொண்ட  நடிகையான கங்கனா ரனாவத் மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு ஆதரவண கருத்துகளையே எப்போதும் பதிவிட்டு வருபவர். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளுக்கும் அடிக்கடி ஆளாகியிருக்கிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உத்ராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார். மக்கள் அந்தத் தேர்தலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது கருத்துக்கணிப்பை தெரிவித்துள்ள அவர் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ.? அதுவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் நடக்கும் என பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranawat made a sensational comment about 2024 parliamentary elections


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->