அட்ஜெஸ்மெண்ட் பன்ன சொல்லி, கண்டிஷன் போட்ட பாரதி கண்ணம்மா குழு.! நடிகை பகீர் பேட்டி.!
bharathi kannama serial actress speaks about adjustment in serial industry
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்றாகும் . இந்தத் தொடர் அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் சென்றது.
சமீபத்தில் இத்தொடரின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் அதன் இயக்குனர் பிரவீன் பென்னட் அதிரடியாக இந்தத் தொடரின் இரண்டாவது பாகத்தை இயக்கி வெளியிட்டார். தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிறது.
இரண்டாம் பாகம் தொடங்கிய நாள் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா விபத்தில் மரணிக்க சித்ரா கண்ணம்மாவாக மாறுகிறார். பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்து தொடக்கத்திலேயே மோதலுடன் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறாக முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் தொடர்பு இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் மது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா பிரசாத் என்ற நடிகை சினிமாவைப் போலவே சின்னத்திரையில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அளித்திருக்கும் ஓப்பன் பேட்டி சின்னத்திரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றி பேசிய அவர் "உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஓகே என்றால் கதாபாத்திரம் எளிதாக கிடைக்கும் என்று கூறினார்கள். நான் அட போங்கடா இதையே தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என நோ சொல்லிவிட்டேன்" என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டி வெளியானதிலிருந்து சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
bharathi kannama serial actress speaks about adjustment in serial industry