இளையராஜாவை மட்டமான மனிதர் என்று விமர்சித்த ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்த அர்ஜூன் சம்பத்.! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளர் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அந்த பேட்டியில் இளையராஜா மாதிரி ஒரு முட்டாள் மட்டமான மனிதரை பார்க்க முடியாது. அவரது இசையை நான் விமர்சிக்கவில்லை. அப்படி விமர்சித்தால் நான் என் குருவை விமர்சிப்பதாக இருக்கும் காரணம் நான் இசையை கற்றுக் கொண்டது அவரிடம் தான்.

அவர் ஒரு ஞானி என்பதற்காக எல்லாமே பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் மனிதராக அவர் மிகவும் மட்டமானவர் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாதவர் ஒரு முட்டாள் போல செயல்படுகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூகுள் சார்பாக ஒரு இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொண்டார். அங்கு இசை சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு முட்டாள் தனமாக கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இயேசு பிறந்தார், இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று சொல்றாங்க. ஆனால் எனக்கு அது எல்லாம் தெரியல. ஆனா ரமண மகரிஷி ஒருத்தர் தான் இறந்து உயிர்த்தெழுந்தார் என்று கூறுகிறார்.

ஆனால், உண்மையில் ரமண மகரிஷி உயிர்த்தெழுந்ததே பொய் ஆனால்  வரலாற்றை திரித்துவிட்டதாக கூறுகிறார். இது பற்றி இளையராஜா சொல்லாமல் மற்றவரை நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார் என அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இந்த கீழ்த்தரமான பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் டிவிட்டரில் ஜேம்ஸ் வசந்தனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த பதிவில் "இசைஞானி இளையராஜாவை மத காழ்ப்புணர்ச்சியுடன் இழிவு படுத்தி பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தனுக்கு கண்டனம்! இரமண மகரிஷியின் உயிர்த்தெழுதல் குறித்து அவமதித்து பேசிய கிறிஸ்தவ மத வெறியன் ஜேம்ஸ் வசந்தன்! தமிழின் போர்வையில் திமுக ஊடகங்களின் பின்னணியில் செயல்படும் ஜேம்ஸை மக்கள் புறக்கணிப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun sambath reply to James vasanthan for Ilayaraja controversy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->