பவதாரணி மறைவு பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று - நடிகர் கமல்ஹாசன்.! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் , தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பவதாரிணி மறைவிற்கு திரையுலகம், அரசியல் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில், " மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். 
பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. 

இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
10 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் 'பாரதி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'மயில் போல பொண்ணு' பாடலைப் பாடியதற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamalhaasan condoles to ilaiyaraja daughter died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->