உக்ரைனின் பிரம்மாண்ட அணையை தகர்க்க ரஷ்யா திட்டம் - அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மட்டும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 8 மாதங்களை கடந்த நிலையில், உக்ரைன் படைகள் முக்கியமான சில பகுதிகளை ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றியுள்ளன.

இரண்டாம் கட்ட தாக்குதலை ரஷ்ய படைகள் தீவிரமாக தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் மாகாணத்தில் உள்ள பிரமாண்டமான நோவா ககோவ்கா அணைப்பகுதியில் ரஷ்யா வெடிமருந்துகளை வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

30 மீட்டர் உயரமும் 3.2 கிலோமீட்டர் நீளமும் கொண்ட நோவா அணை 1956ஆம் ஆண்டு டினிப்ரோ ஆற்றின் மீது ககோவ்கா நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இந்த அணையை தகர்ப்பது கெர்சன் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை பேரழிவுக்கு உட்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவை இந்த அணையை தகர்க்க வேண்டாம் என்று எச்சரிக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine accuses Russia to plan to destroy Ukraine dam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->