இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அதே போன்று அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையை தலைநகர் கொழும்பிலிருந்து தென்கிழக்கே 1,362 கிலோமீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சரியாக இன்று பிற்பகல் 12:31 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்பு நகரில் அதிகமாக உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful earthquake in Sri Lanka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->