மதுபோதையில் விமானத்தை இயக்க வந்த விமானி - நொடியில் தப்பிய 267 பயணிகளின் உயிர்.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் விமானத்தை இயக்க வந்த விமானி - நொடியில் தப்பிய 267 பயணிகளின் உயிர்.!

பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்திலிருந்து வர்ஜீனியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திற்கு 267 பயணிகளுடன் விமானம் ஒன்று பறக்கத் தயாராக இருந்தது.

இந்த விமானத்தை 63 வயதுடைய அமெரிக்க விமானி ஒருவர் இயக்க தயாராக வந்தபோது, அவர் குடிபோதையில் இருந்ததற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிந்ததுடன் சற்று தள்ளாடியபடியும் வந்துள்ளார். இதைப்பார்த்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை இரண்டு முறை ஆல்கஹால் சோதனைகளுக்கு உட்படுத்தினர். 

அதில் அவர் ஆல்கஹால் அருந்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார் அந்த விமானியை விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கைது செய்தனர்.

மேலும், புறப்பட்டது தயாராக இருந்த அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​விமானி முதல்நாள் இரவு இரண்டு கிளாஸ் ஒயின் மட்டுமே குடித்ததாக தெரிவித்தார். 

இருப்பினும் நீதிபதி, " உங்களின் பொறுப்பற்ற செயலால் விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம், நீங்கள் 267 பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்" என்று கூறி, அவரை ஆறு மாத இடைநீக்கம் செய்ததுடன், சிறைத்தண்டனை மற்றும் 5,000 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poilet arrested for came to fly with drunk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->