பிலிப்பைன்ஸில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்வு.!
Philippines flood people death increased
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் லெய்டெ மாகாணங்களிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் அப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அந்த நகரின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் சேதம் அடைந்து சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நிலச் சரிவுகளில் மாயமான மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Philippines flood people death increased