பாகிஸ்தான் தேர்தல்: முன்னாள் அமைச்சருக்கு போட்டியிட தடை! காரணம் என்ன?
Pakistan Ex minister banned contesting election
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி துணை தலைவருமாக உள்ளவர் ஷா மஹ்மூத் குரேஷி.
இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தார்.
சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக ஷா மஹ்மூத் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஷா மஹ்மூத்க்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஷா மஹ்மூத்தை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்துள்ளது.
வருகின்ற 8 ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஷா மஹ்மூத் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டு மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan Ex minister banned contesting election