வண்ணாரப்பேட்டையில் 8 கிராம் போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர் 8 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கைது செய்யப்பட்ட வாலிபர் பெயர் காதர் மொய்தீன் என்பதும், இவர் சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸப் குழு மூலம் போதைப்பொருள் வாங்கியதும் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight gram drugs seized in chennai vannarapettai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->