ஆற்றுக்குள் பாய்ந்த மினிவேன்! பரிதாபமாக பலியான குழந்தைகள்!
Indonesia car accident
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு சுமத்ரா மாகாணத்தில் மினிவேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதமாக பலியாகியுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங்க்காட் மாவட்டத்தில் உள்ள ஸ்டங்கிட் கிராமத்தில், மரப்படகில் ஒரு மினிவேனை ஏற்றி வாம்பு நதியினை கடந்தபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
படகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேனின் என்ஜினை ஆப் செய்யாமல் இருந்துள்ளது, திடீரென படகில் இருந்து மினிவேன் கிளம்பி, ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் வேனில் இருந்த 5 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் நிலைமை என தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தால், அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும், இரண்டு பேரை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.