இரவு நேர ஆபாச விடுதிகள் மற்றும் பல பெண்களுடன் உல்லாசம்.!! இறுதியில் அரங்கேறிய துயரம்.!!
in British a police searching man arrest by Romanian police
பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த வாலிபரான ஷனே ப்ரெய்ன் (வயது 21)., இவர் கடந்த 2015 ம் வருடத்தில் அதே பகுதியை சார்ந்த 21 வயதுடைய இளைஞரான ஜோஸ் ஹான்சன் என்ற வாலிபரை கொடூர முறையில் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கு மட்டுமல்லாது கொலை மற்றும் கடத்தல் சம்பவத்திலும் ஈடுபட்டதை தொடர்ந்து., அந்த வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை தேடி வந்தனர். இவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்ததை அறிந்த ப்ரெய்ன்., விமானம் மூலமாக நாட்டை விட்டு தப்பியுள்ளார்.
நாட்டை விட்டு தப்பி சென்ற இவர் துபாய்., நெதர்லாந்து போன்ற பல நாடுகளுக்கு சென்று., அங்குள்ள பெண்களுடன் இரவு நேர ஆபாச விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள்., பெண்களுடன் உல்லாசம் என்று இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., இவரை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் துறையினர் இவரை கண்டறிந்து கொடுக்கும் நபர்களுக்கு சுமார் 50 ஆயிரம் பவுண்டுகள் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும்., இவரது புகைப்படம் குறித்த தகவலை காவல் துறையினர் வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலானது உலகம் முழுவதும் தெரியவரவே., ரோமானிய நாட்டின் காவல் துறையினர் மூலமாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பல நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்ற சமயத்தில் தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த நிலையில்., அங்குள்ள காவல் துறையினரானால் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
in British a police searching man arrest by Romanian police