பிலிப்பைன்ஸ் தலைநகர் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து! குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.!
Fire accident in residential area of manila
பிலிப்பைன்ஸ் தலைநகர் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள கியூசான் நகரில் புறநகர் பகுதியில் நெரிசலான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென்று பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 80 வீடுகள் தீயில் கருகி நாசமாகி உள்ளன. தீப்பிடித்த வீடுகளில் இருந்து வெளியேறிய போது பலர் படுகாயம் அடைந்ததோடு 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.
English Summary
Fire accident in residential area of manila