உணவகத்தில் ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பு .,பசியை தீர்க்க வந்து உயிரை விட நேர்ந்த பரிதாபம்..!
உணவகத்தில் ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பு .,
கனடாவில் உள்ள இந்திய உணவகத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் மிஸ்ஸிஸாகா பகுதியில் பாம்பே பெல் எனப்படும் இந்திய உணவகம் உள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த போது சுமார் 10.30 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.
இந்நிலையில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் குண்டு வெடிப்புக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Sudden blast at the restaurant.,people in danger condition.!