14 வருடம் கோமாவில் இருந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை.! அதிர்ச்சியான மருத்துவர்கள்., விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் உள்ள பினிக்ஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 14 வருடங்களாகவே "கோமா" நிலையில் உள்ள பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவர் கோமாவில் இருந்து மீண்டு வருவதற்காக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்., கடந்த மாதம் 29 ம் தேதியன்று கோமாவில் இருந்த பெண்மணி திடீரென வேதனையுடன் முணங்க துவங்கியுள்ளார். 

இதனை கவனித்த பணியாளர் ஒருவர் பிரசவத்திற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன்., மருத்துவர்களிடம் விசயத்தை தெரிவித்து அவரை பிரசவ வார்டிற்கு கொண்டு சென்றுள்ளார். பிரசவ அறையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில்., அந்த குழந்தையானது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

குழந்தை நல்ல நிலையில் இருந்தாலும்., அவர் கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்து சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு எப்படி குழந்தை பிறந்திருக்கும்., அவரை யாரேனும் பலாத்காரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த விஷயம் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. 

அந்த விசாரணையில்., மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண் ஊழியர்களுக்கும் டி.என்.ஏ  பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டு. அதன் மூலம் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும்  நாதன் சுதர்லாந்த் (36) என்பவர் கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்தது தெரியவந்தது. இதனை அறிந்த காவல் துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl in coma will pregnant in america


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->