மொபைல் நெட்வொர்க் போட்டி போட்டுகொண்டு அள்ளிக்கொடுக்கும் இலவச ஆஃபர்கள்!. மக்களோ அது வேண்டாம் இத செய்விங்களா?.
இலவச ஆஃபர்கள்!
பாரத் ஏர்டெல்,ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா மற்றும் வோடஃபோன் செல்லுலர் ஆகிய மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இடையே தற்போது வாடிக்கையாளர்களுக்கான ஆஃபர்களை வழங்கும் போட்டி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஜியோ வந்தபிறகு எல்லா நெட்ஒர்க்களும் குறைந்த விலையில் இலவச கால் என கொண்டுவந்தனர். ஏர்செல் முடக்கத்திக்கு பிறகு இது அதிகரித்து வாடிக்கையாளர்களைக் கவர அனைத்து நெட்வொர்க்கும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்து வருகின்றனர்.
அவர்கள் வழங்கும் ஆஃபர்களாக அன்லிமிடட் டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் டேட்டாகளின் காலவரையறை போன்ற சேவைகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு இவர்களுக்கிடையே நடக்கும் போட்டி மக்களுக்கு பயனாக உள்ளது.
இதனை பற்றி மக்கள் கூறுகையில் மருத்துவமனைகளும்,பள்ளிகளும்,கல்லூரிகளும் இதேபோல் போட்டி போட்டு இலவச சேவை செய்தால் அனைத்துமக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என கூறுகின்றனர்.
English Summary
people expecting another offer