தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! அதிர்ச்சி காரணம்!!
women police inspector suicide
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூரை சேர்ந்தவர் மாணிக்கவேல். இவருடைய மனைவி ஜெய்ஹிந்த்தேவி. மாணிக்கவேலின் மனைவி ஜெய்ஹிந்த்தேவி கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் ஜெய்ஹிந்த்தேவி. இதையடுத்து ஜெய்ஹிந்த்தேவியும், மாணிக்கவேலுவும் திருமணம் செய்து கொண்டு திண்டிவனத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் ஜெய்ஹிந்த்தேவி பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக மாணிக்கவேலுவுக்கும், ஜெய்ஹிந்த்தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்ததும் ஜெய்ஹிந்த்தேவி, திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ஜெய்ஹிந்த்தேவி தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலையில் நீண்டநேரமாகியும் கதவை திறக்காத மனைவி ஜெய்ஹிந்த்தேவி அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த அவர் பதறியபடி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜெய்ஹிந்த்தேவி கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
English Summary
women police inspector suicide