வேலைக்கு சென்று வீடுதிரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! வேதனையில் துடிதுடித்து கதறிய பரிதாபம்!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பெருமாள் தாங்கல் புதூர் கிராமம் பகுதியில் வசித்து வருபவர் வனப் பெருமாள். இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு  போத்திராஜ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வனப்பெருமாள் இரவு பணிக்காக சென்றுள்ளார் அப்போது வீட்டில் விஜயலட்சுமி மற்றும் போத்திராஜ் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள்  நுழைந்த மர்மநபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த 26 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். மேலும் அருகில் இருந்த மகன் போத்திராஜையும் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய வனப் பெருமாள் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவை திறக்காததால் பதற்றமடைந்த அவர் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார்.
அப்பொழுது இரத்த வெள்ளத்தில் மிதந்த தனது மனைவி மற்றும் மகனை கண்டு அதிர்ச்சியில் கதறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women and her son killed for jewels at night


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->