சமையல் செய்யாமல் இதெல்லாம் ஒரு பொழப்பா? கடுப்பான கணவனால், காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


மதுரவாயல் அருகேயுள்ள நூம்பல் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நல்லையா. 24 வயது நிறைந்த இவர்   சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

இவருடைய மனைவி கிரிஜா. இவர் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் அழகு நிலையம் ஒன்றில்  வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கிரிஜா அடிக்கடி அதிகநேரம் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு சமீபத்தில் இரவு வேலை முடிந்து நல்லையா வீட்டுக்கு திரும்பியபோது கிரிஜா,  சமையல் செய்யாமல் செல்போனில் பேசிகொண்டுள்ளார்.

இதனால் நல்லையா கோபத்தில் கிரிஜாவுடன் சண்டை போட்டுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஆத்திரமடைந்த நல்லையா, வேகமாக தனது அறைக்குள் சென்று படுத்து தூங்கி விட்டார்.

இந்நிலையில் கணவர் திட்டியதால் மனமுடைந்த கிரிஜா,  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து நள்ளிரவில் மனைவியை அறையில் காணவில்லை  என நல்லையா எழுந்து பார்த்துள்ளார். அப்பொழுது ஹாலில் தனது மனைவி கிரிஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர் பெரும்அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைத்த  போலீசார், தூக்கில் தொங்கிய கிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife commits suicide for husband scold


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->