யார் பேரடா பச்சை குத்திருக்க?. நடுரோட்டில் கணவனை அடித்து துவைத்த மனைவி!. - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு நபர், திருமணத்திற்கு முன் பல பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்து திருமணம் செய்துக்கொண்டதால் கணவனை பட்டப்பகலில் சாலையில் வைத்து சரம்வாரியாக தாக்கியுள்ளார்.

கணவன் மனைவி இருவரும் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருந்ததை கண்ட அவரின் மனைவி, அவரை அந்த கோவிலின் முன்பே வைத்து  சரமாறியாக அடித்துள்ளார். இருவரும், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். 

     

அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருந்ததை மறைத்து, திருமணம் செய்துக்கொண்டதை தெரிந்த அவரின் மனைவி ஆத்திரமடைந்து கணவரை சரமாறியாக சாலையில் அடித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

மேலும் உங்களுக்குள் பிரச்சனை வந்தால் காவல் நிலையத்தை அணுகவேண்டும் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். கோவிலுக்கு வந்த தம்பதியினர் இருவரும் அடித்துக்கொண்டதை அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife beat her husband on road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->