ஸ்டாலினை 'முட்டாள்' என ஆவேசமாக பேசிய விஜயகாந்த் மகன்!! வேலூரில் பரபரப்பு பிரச்சாரம்!!
vijaya prabakaran says about stalin in vellore
புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், இன்று வேலூர் சைதாப்பேட்டையில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர், "வேலூர் எங்கம்மாவோட சொந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். வேலூர் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறி விட்டது. ஏனென்றால், ஆட்சியிலே இல்லை என்றாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது.
அது யாருடையது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். விஜயகாந்த்தை தொட்டால் பிரச்சனை என்றேன். துரைமுருகன் தேவையில்லாமல் சீண்டி பார்த்தார். அதன் விளைவு அவர் புரிந்துகொண்டார். ஸ்டாலின் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை எனக் கூறுகிறார். இது விஜயகாந்திற்கு சொன்னால் தான் பொருந்தும்.
உங்களது உடல் முழுவதும் கணம் இருக்கிறது. அதனால், தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ சி சண்முகம் மக்கள் நலத் திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார். ஸ்டாலின் எல்லாவற்றையும் எதிர்க்கிறார். நான் அவரை உளறும் புகார் பெட்டி என கூறினேன்.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். மாநிலத்திலும், மத்தியிலும் சரியான ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு நன்மை பயக்கும்' என விஜயகாந்த் கூறியுள்ளார்" என அவர் பேசினார்.
English Summary
vijaya prabakaran says about stalin in vellore