வேலுார் சிறையில் இருந்தும்.. அடங்க மறுத்த பெண் கைதி..! சிறை வார்டானை அடித்து அட்டூழியம்..!!
வேலுார் சிறையில் இருந்தும் அடங்க மறுத்த பெண் கைதி..! சிறை வார்டானை அடித்து அட்டூழியம்..!!
வேலுார் பெண்கள் சிறையில், 350 பெண் கைதிகள் உள்ளனர். இவர்கள், கொலை, திருட்டு உள்ளிட்ட பல குற்றச் செயல்களைப் புரிந்ததால், சிறை வைக்கப் பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு, மாதம் ஒரு முறை, மனநல மருத்துவர் செல்வகுமார், வேலுார் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று சிறைச்சாலைக்கு வந்த டாக்டர், செல்வகுமார், கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொண்டார். அப்போது, பெண் கைதிகளை, டாக்டரிடம் காட்டுவதற்காக, அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சமையல் கூடத்தில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதியான வித்யா (வயது 30) என்பவரை, சிறை வார்டன் சுதா, மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு, வித்யா, வர முடியாது என்று மறுத்ததுடன், வார்டன் சுதாவை ஆபாசமாகத் திட்டி உள்ளார். இதனால், இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரம் அடைந்த கைதி வித்யா, வார்டன் சுதாவை சராமரியாகத் தாக்கி உள்ளார். இதில் சுதா பலத்த காயம் அடைந்தார். அவரை, அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, அவரை வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து, துணை சிறை அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வித்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
VELLORE JAIL PRISONER ATROCITY REFUSE PRISON WARDEN