நாங்க திமுக கூட்டணியில் இருக்க காரணம் இது தான்!! உண்மையை ஒப்புக்கொண்ட வைகோ!!
vaiko says why we joint with dmk
திருச்சியில் மதிமுக செயலாளர் வைகோ," திமுக கூட்டணையில் மதிமுகவின் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அது பற்றி தற்பொழுது ஏதும் கருத்து தெரிவிக்க இயலாது.
திராவிடத்தை காப்பது அவசியமாகும், அதனால், திமுகவிற்கு எப்பொழுதும் பக்க பலமாக இருப்போம். இதுகுறித்த ஓராண்டுக்கு முன்பாகவே மதிமுக முடிவு செய்துவிட்டது. இதனால் தான் நாங்கள் திமுகவிற்கு பக்கபலமாக இருக்க நினைக்கிறோம்.
சமூக செயல்பாட்டாளர் முகிலன் எதனால் கடத்தப்பட்டார் என தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என நினைக்கிறேன். முகிலனுக்கு எது நடந்தாலும் அதற்கு காவல் துறை தான் பொறுப்பு.
முகிலனை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். இல்லையெனில் இது மக்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும். " என கூறியுள்ளார்.
English Summary
vaiko says why we joint with dmk