குரூப்-1, 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது.? டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய குரூப்-1 தேர்வுகள் மூலம் நடத்தப்படுகின்றன.

இதற்கான முதல் நிலை தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் முதன்மை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-2, குரூப்-2ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள் மற்றும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC announced that Group exams results will be published in December


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->