இளம் பெண்ணைக் கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்..! அதற்கு துணை போன மனைவி..!! ஈரோட்டை நிலைகுலைய வைத்த சம்பவம்..!!! - Seithipunal
Seithipunal


கட்டிய கணவன் வேறொரு பெண்ணைப் பார்த்தாலே, அவன் மனைவி சண்டைக்கு வருவாள். ஆனால், ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் சபலத்திற்காக, இன்னொரு பெண்ணைக் கடத்துவதற்கு, அவரது மனைவியே உடந்தையாக இருந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் உள்ள ஆப்பக்கூடல் முனியப்பன்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 33). இவர் போபி செட்டி பாளையம் மது விலக்கு பிரிவில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவியின் பெயர் சத்யா (வயது 25). இவர்களுக்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர். சத்யாவின் உறவினர் ஒருவரின் மகள், ஒரு தனியார் கல்லுாரியில் பி.எட். படித்து வருகிறார். இவர் மீது வெங்கடாசலத்திற்கு ஒரு கண்.

அந்தப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினார். இதற்கு அவரது மனைவி சத்யாவும் உடந்தையாக இருந்தார். இந்த நிலையில், நேற்று முன் தினம், அந்தப் பெண் ஒரு தனியார் கல்லுாரியில் தேர்வு எழுதினார்.

அவர் தேர்வு எழுதி முடித்து விட்டு, வெளியே வந்ததும், அந்தப் பெண்ணை தான் வந்த காரில் கடத்திச் சென்றுள்ளார். அந்தக் காரில், சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி சத்யாவும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

பின் அந்தப் பெண்ணின் தந்தைக்கு ஃபோன் பண்ணி, “உங்கள் மகளை நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவளைத் தேட வேண்டாம்” என்று சொல்லி உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

வெங்கடாசலத்தைத் தேடி அலைந்தனர், போலீசார். அதனால், வெங்கடாசலம் அந்தப் பெண்ணை விட்டு விட்டு, தப்பி சென்று விட்டார். பின்  போலீசார் அந்தப் பெண்ணை மீட்டனர். சத்யாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    தப்பிச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரைத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN POLICE KIDNAPPED IN YOUNG WOMEN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->