நண்பனின் மனைவிக்கு, நண்பனே பாலியல் தொல்லை கொடுத்ததால், நேர்ந்த விபரீதம்!.. - Seithipunal
Seithipunal


 நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நபரை கொலை செய்ததாக மூன்று பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மார்த்தாண்டம் அருகே தேனாம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் இவர் கட்டிட தொழில் செய்துவந்துள்ளார். கருத்துவேறுபவடு காரணமாக இவர் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இவரை கடந்த 17ம் தேதி அன்று குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்டனர், இதுதொடர்பாக மார்த்தாண்டம் பொலிசார் விசாரணை நடத்தியதில் இவரது நண்பர்களை சுந்தர், சதீஷ் மற்றும் அருள் ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மூவரையும் கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது என்பவர் சுந்தர் அளித்த வாக்குமூலத்தில், எனது நெருங்கிய நண்பர் ஸ்டான்லி ஜோன்ஸ், நாங்கள் காலை வேலைக்கு சென்று விட்டு இரவில் மது அருந்துவது வழக்கம். இதனால் அவர் அடிக்கடி எனது வீடு வரை வந்து செல்வார், எனது மனைவியுடன் பழகினார், எனது மனைவிக்கு போன் செய்து உல்லாசத்துக்கு அழைத்தார்.

போதையில் என்னிடனே உன் மனைவியை அனுப்பி வை என என்னிடம் பலமுறை கூறினார், இதனால்தான்  கோபமடைந்தேன். தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து வந்ததால் சதீஷ், அருளின் உதவியுடன் கடந்த 16ம் தேதி இரவு கொலை செய்தேன்.

பின்னர் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த எங்களை பொலிசார் பிடித்து விட்டனர் என கூறியுள்ளார், இதனையடுத்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் சிறையில் அடைத்தனர். அவர்களின் வாக்குமூலம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three people have reportedly to murdered his friend by try to raping his friend's wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->