ஆற்றில் குதித்த இளைஞர் 3 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தேனி, கம்பம் அருகே உள்ள முல்லை பெரியார் ஆற்றில் குதித்த இளைஞர் 3 நாட்கள் கழித்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் விஜயகுமாரை பிடிப்பதற்காக நேற்று முன்தினம் போலீசார் உடன் சேர்ந்து 3 இளைஞர்கள் சென்றனர். 

விஜயகுமார் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த இளைஞர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் குதித்து தேடியுள்ளனர்.

 

பின்னர் போலீசார் உள்பட 3 பேர் கரைக்கு வந்து நிலையில் உடன் குதித்த பிரபுதேவா என்ற இளைஞர் கரைக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் நேற்று முன்தினம் முதல் பிரபுதேவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று காலையில் பிரபுதேவா சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni youth jumped river recovered  dead body after 3 day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->