தீயில் கருகி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவி! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


தேனி, ஆண்டிப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை தேனி அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். 

தற்போது அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் தனது மனைவியுடன் முருகன் பேத்தியை பார்ப்பதற்காக புறப்பட்டார். 

அப்போது இரண்டாவது மகள் கோபிகா (வயது 14) பத்தாம் வகுப்பு படிக்கிறார். இவர் தானும் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் வீட்டிலேயே இருக்கும் படி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். 

இதனால் மன வேதனை அடைந்த கோபிகா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோபிகாவை மீட்டு சிகிச்சைக்காக தேன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோபிகா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது தொடரபாக போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni 10th class student committed suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->