39 இடங்களுக்கு 37 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்!! அதிரடி அறிவிப்பு!!
ThangaTamilselvan says about election
மதுரை ஒத்தக்கடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் அமமுகவின் முக்கிய நிர்வாகியான, தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர், 'முதல்வரை மாற்ற வேண்டும் என மனுகொடுத்த ஒற்றை காரணத்திற்காக நான் உட்பட 18 எம்.எல். ஏ. க்களும் நீக்கப்பட்டுள்ளோம். ஆனால், எதிர்த்து ஓட்டுப்போட்ட பன்னீர்செல்வம் உட்பட 11 பேரை நீக்கம் செய்யவில்லை.
கடந்த தேர்தலில் ஜெயலலிதா லேடியா, மோடியா என கேட்டார். மக்கள் அம்மாவிற்கு தான் வாக்களித்துள்ளனர். திமுகவை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. தற்பொழுது கருணாநிதியும் இல்லை. அம்மாவும் இல்லை.
மக்கள் தினகரனை தான் விரும்புகிறார்கள். மக்கள் செல்வாக்கு நமக்கு உள்ளது. 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் நம்மால் வெற்றி பெற முடியும். மதுரை தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அனைவரும் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும்.
வரும் தேர்தலில் அமமுக மதுரையில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும்' என அதில் கூறியுள்ளார்.
English Summary
ThangaTamilselvan says about election