இது தான் ஸ்டாலினுக்கு கடைசி வாய்ப்பு!! இதைவிட்டா வேற வழியே இல்லை!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ' ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சிறப்பாக செயல்படுகின்றனர்.

திமுக ஆட்சியில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது. தனி நபர் வருமானம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

இதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால், ஸ்டாலின் தினமும் பொய்களை விதைத்து வருகிறார். அவர் பேச்சு மக்களுக்கு சிரிப்பை மூடும் விதமாக அமைந்துள்ளது. 

பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அதிமுகவிற்கு பலத்தை சேர்த்துள்ளது. இது திமுகவிற்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும். 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்துவிடும். அதை அதிமுக தொண்டர்கள் முடித்தார்கள் என்ற பெருமை நமக்கு வேண்டும். அந்தளவு நாம் உழைக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார். 

அதிமுகவின் இந்த பலமான கூட்டணிக்கு திமுக பதிலடி கொடுக்கவும், திமுகவினர் தங்களது கட்சியை தக்கவைத்து கொள்ளவும், ஸ்டாலின் தனது நிர்வாக திறமையை நிரூபிக்கவும் இது தான் கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin should prove him in this election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->