ITRaid || பொள்ளாச்சியில் ரூ.32 கோடி பறிமுதல்.!! வருமானவரித்துறை அதிரடி.!!
Rs32 crores seized by Income tax dept
திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உச்சவேலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அருள் முருகன் மற்றும் சரவணன் முருகன் ஆகியோருக்கு சொந்தமான கோழிப் பண்ணையின் தலைமை அலுவலகம் ஆனது வெங்கடேசா காலனியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்த வருமான வரித்துறை சோதனைகள் அவர்களின் அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 32 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 32 கோடி ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Rs32 crores seized by Income tax dept