சென்னையில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வாட்ஸ்அப் மூலம் வீட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அங்கு ரகசியமாக கண்காணித்தினர். அப்போது வாலிபர்கள் சிலர் சந்தேகத்திற்கிடமாக அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அதிரயாக அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்திய போலீசார் குன்றத்தூர் சடேஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த கிஜிர் அலி என்பவர் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் இளம்பெண்களின் ஆபாச படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பாலியல் புரோக்கர் கிஜிர் அலியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prostitute in Chennai broker arrested


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->