மனைவி குழந்தைகளுடன் மர்மமுறையில் உயிரிழந்த மருத்துவர் - போலீசார் விசாரணை.!
docto sucide with wife and babys in andira
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். எலும்பியல் மருத்துவராக பணிபுரிந்து வந்த இவரது வீட்டிற்கு வழக்கம்போல பணிப்பெண் வேலைக்கு சென்றபோது மருத்துவர் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் தகவல் தெரிவித்தார்.
அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவரின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மருத்துவர் வீட்டின் பால்கனியில் தூக்கில் தொங்கிய படியும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளேயும் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீநிவாஸ், மருத்துவமனை ஒன்றை நிறுவியதாகவும், பின்னர் நிதி நெருக்கடி காரணமாக அதை விற்றதாகவும் தெரியவந்தது.
மேலும், இந்தப் பணப் பிரச்சினை காரணமாக மருத்துவர் ஸ்ரீநிவாஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
docto sucide with wife and babys in andira