போலீசாரிடம் இருந்து தப்பிக்க அடுத்தவர் மனைவியை மணப்பெண்ணாக்கிய அதிர்ச்சி சம்பவம்!. அவர்களை சிக்கவைத்த சிறுமி!.
திருச்சி அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுக்க அதிகாரிகள் சிலர் திடீரென வருகை தந்ததால், அடுத்தவர் மனைவியை மணமகளாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 25 வயது நிரம்பிய ஆனந்த் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. சிறுமிக்கு திருமணம் நடப்பதை அறிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
அவர்கள் கூறுவதை பொருட்படுத்தாமல்அவர்களது திருமண வேலைகளை கவனித்து வந்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல் துறை அதிகாரிகள் வருவது குடும்பத்தினருக்கு தெரியவந்தது இதனால் உடனடியாக சிறுமியை ஒரு வீட்டில் மறைத்து வைத்து விட்டு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவற்றின் மனைவி 25 வயது நிரம்பிய கவுசல்யா மணப்பெண் போல அலங்கரித்து மணமேடையில் அமர வைத்துள்ளனர்.
திருமணம் நடக்கும் இடத்தியிற்கு வந்த காவல்துறையினர் சிறுமிக்கு திருமணம் செய்வது தவறு. திருமணத்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளனர். இந்த பொண்ணுக்கு 25 வயது ஆகிறது. இது தான் உங்களுக்கு சின்ன பொண்ணா என இரு குடும்பத்தாரும் சாமர்த்தியமான பதிலை கூறினர்.
அவர்களின் பதிலால் அதிர்ச்சியடைந்து குழம்பிப்போன காவல்துறையினர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், அலங்காரம் கலைக்கப்பட்டிருந்த கோலத்தில் சிறுமி ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த சிறுமி நடந்தவற்றை விவரித்த உடன், ஆனந்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆனந்த் 3-வது திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்தை கடுமையாக எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
English Summary
police stopped child marriage