இளம்பெண்கள்..! ஈரோட்டில் குவியும் தொழிலதிபர்கள்..!! விபச்சாரத்தை ஊக்குவிக்கும் காவலர்கள்..!!! - Seithipunal
Seithipunal


போலீஸ் உதவியுடன் ஜோராக நடந்து கொண்டிருக்கும் விபசாரம்…..

ஈரோடு மாவட்டத்தில், பூங்கொடி என்ற பூங்கோதை பெண்களை வைத்து விபசாரத் தொழில் செய்து வருகிறார். இதனால், இவர் தொழில் செய்யும் இடத்திற்கு சில காவலர்கள், அடிக்கடி  விஜயம் செய்து, அங்குள்ள பெண்களை அனுபவித்து விட்டு வருவார்கள்.

இதனால், அந்த விபசார விடுதி நடத்தும் பெண், இவர்களை ஓசி கிராக்கி, என்றே அழைத்திருக்கிறார். சமீபத்தில், இந்தப் பூங்கொடியுடன் தொடர்புடைய காவலர்கள் பேசிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைத் தலங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரத்தில், இந்தப் பூங்கொடி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். இவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே, இவர் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, ஆலோசனை வழங்கி உள்ளனர்.

வீரப்பன் சத்திரம் காவல் நலைய தலைமைக் காவலர் வடிவேல், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன், சூரம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜ்,  கருங்கால் பாளையம் தலைமைக் காவலர் ஆனந்த குமார், ஆகியோர்  பூங்கொடியுடன் பேசிய ஆடியோ பேச்சுக்கள் தான் தற்போது பரபரப்பாக பேசப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆடியோவில், மேலே குறிப்பிட்ட அத்தனை காவலர்களும், பூங்கொடியின் பாதுகாப்பில் அக்கரை கொண்டு பேசியதும், அவரைப் போலீஸ் பிடியில் இருந்து தப்பிவிக்க ஆலோசனைகள் வழங்கியதும் தெரிய வந்துள்ளது.

இந்த மாதிரி விபசாரம் செய்பவர்களை, சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தும் பொறுப்பில் உள்ள காவல் அதிகாரிகள், அந்தக் குற்றத்திற்கே துணை போனது, மற்ற காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police help inghead of the prostitution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->