இனி நாங்க நிம்மதியா லஞ்சம் வாங்குவோம்..! புதிய தில்லு முள்ளு வழியை கண்டுபிடித்த தமிழக போலீஸ் அதிகாரி..!! - Seithipunal
Seithipunal


சமீப காலங்களில், சமூக வலைத் தலங்களிலும், வாட்ஸ் அப்பிலும் நிறைய போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு, கையும் களவுமாக மாட்டிக்  கொள்கின்றனர். இவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தான், சிக்னல்களில், ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில், அடிக்கடி போலீசார், வசூல் வேட்டையாடும் போது, சிக்கிக் கொள்கின்றனர். எஸ்.பி-யும், இது பற்றி, போலீசார்களை கடுமையாக எச்சரித்து வருகின்றார்.

ஆனால், நம் போலீஸ்காரர்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன? கேமராவில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும்,  தற்போது புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், பனையபுரம் மது விலக்கு செக் போஸ்டில், ஆனந்தன் என்று முடியும் பெயரைக் கொண்ட போலீஸ் அதிகாரி, ரொம்ப விபரமாக, தனது வசூலுக்கென்றே, தனி ஆளை நியமித்திருக்கிறார். அவருக்குத் தெரிந்த முதயவர் ஒருவரை செட் பண்ணி, வசூல் வேட்டைக்கு நிறுத்தி வைத்திருக்கிறாராம்.

இப்போது, கேமராவில், அந்தப் பெரியவர் தான் தெரிவாரே தவிர, இவர் சிக்க மாட்டார்.

புதுச்சேரியிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கனை நிறுத்துவது மட்டும் தான் போலீசார் வேலை. மற்றபடி, அவர்களிடம் எடைக்கேற்றவாறு வசூலிப்பது, அந்தப் பெரியவரின் வேலை.

இதனால் வசூலும் ஆகி விடுகிறது. போலீசாரும் கேமராவில் சிக்குவதில்லை. இதைக் கண்டு, மற்ற செக் போஸ்டில் உள்ள போலீஸ்காரர்களும், இது போல வாடகைக்கு ஆட்களைத் தேடி வருகிறார்களாம்!
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICE FIND A NEW METHOD FOR EARN MONEY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->