தொடரும் போலீசாரின் சில்மிஷங்கள்! போன வாரம் ஒரே முத்தமழை, இந்த வாரம் என்ன தெரியுமா?
தொடரும் போலீசாரின் சில்மிஷங்கள்! போன வாரம் ஒரே முத்தமழை, இந்த வாரம் என்ன தெரியுமா?
திருச்சியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. 50 வயது நிறைந்த இவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் இரவு பணியில் இருந்தபோது அங்கிருந்த பெண் போலீசாரிடம் முத்தம் கொடுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அந்த எஸ்.ஐ அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெண் போலீசாரின் சம்மதத்துடனே, தான் அவ்வாறு நடந்துகொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் காவலரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் வலுக்கட்டாயமாகதான் என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் என தெரிவித்தார். ஆனால் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அதில் பெண் போலீசாரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் பாலசுப்பிரமணியத்தின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பாலசுப்ரமணிக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.
இந்நிலையில், பாலசுப்பிரமணி அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார்.மேலும் மூன்று நாட்களாக தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
police elopped with his illegal affair