வேலை பிடிக்கவில்லை என திடீர் முடிவு எடுத்த போலீஸ்!! கதறிய குடும்பத்தினர்!!
police constable suicide
மதுரை பேரையூர் அருகில் உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராமர் (வயது29). இவர் மதுரையில் உள்ள ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தம். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆயுதப்படை பிரிவில் குடியிருப்பில் ராமர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ராமருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதவிர மேலும் ராமருக்கு பணிச்சுமை காரணமாக மனவருத்தம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் வாழ்க்கை வெறுத்துப்போன ராமர் இன்று அதிகாலை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம், பக்கம் வீட்டார்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று ஏட்டு ராமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமரின் உடலை பார்த்து அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி துடித்த சம்பவம் பார்ப்பவர்களின் மனத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணையின் போது ஏட்டு ராமர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.