நடிகர் தனுஷிற்கு எதிராக வழக்கு தொடந்த தம்பதிகளுக்கு கொலை மிரட்டல்!! அச்சத்தில் உறைந்த மகள்!!
police complaint against actor dhanush
பிரபல நடிகரான தனுஷிற்கு நாங்கள் தான் பெற்றோர். அவர் எனது வாரிசு என மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி போலீசில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
அந்த புகார் இணையத்தில் வைரலாகி அவர்களுடைய புகைப்படத்துடன் இந்த வழக்கு மிகவும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், தன்னை தனுஷின் தந்தை என அடையாளப்படுத்தி கொண்டவர், போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ' திருப்புவனம் அருகே காசி நகரில் உள்ள எனது மகளான தனத்தின் வீட்டில் ஒரு வருடமாக வசித்து வருகிறேன்.
இதற்கு முன்பு எனது குடும்பத்துடன் மதுரையில் உள்ள மேலூரில் வசித்து வந்தேன். தற்பொழுது என் மகன் கலைச்செல்வன் தான் தனுஷ் என தனது பெயரை மாற்றி கொண்டு நடிகராக உள்ளார்.
கலைச்செல்வன் அவருக்கு 16 வயதிருக்கையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் வீட்டை விட்டுச் சென்றார். நாங்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சில ஆண்டுகள் கழித்து தான் அவரை கண்டறிந்தோம். ஆனால், தற்போது இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகனாக அவர் இருக்கின்றார். எனது மகனை மீண்டும் எங்களுடன் இணைத்து கொள்ள எண்ணி தான் வழக்கு தொடர்ந்தேன்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தது குறித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளேன்.
மார்ச் 6 ம் தேதி தனுஷ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நான் என் மக்கள் வீட்டில் இருக்கையில் கடந்த ஒரு வரமாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கதவை தட்டி பயமுறுத்துகின்றனர்.
வயது முதிர்ந்த எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" என கூறியுள்ளார். இதனால் அவரது மகள் தனம் மிகவும் பயத்தில் உள்ளதாக தெரிகிறது.
English Summary
police complaint against actor dhanush