#விருதாச்சலம் || குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார்.!! - Seithipunal
Seithipunal


கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலினம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் ஆர் தினை வரும் இந்த சூழலில் விருதாச்சலத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலத்தில் வீட்டு குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெங்கடேசன் என்பவர் அளித்த அந்த புகாரில் சொத்து பிரச்சனையின் காரணமாக தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை தனது அண்ணன் மனைவி மகாலட்சுமி கலந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police case filed Human waste mixed in drinking water tank in viruthachalam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->