"அரசு வேலை வேணுமா? காசை கொடுத்தாலே போதும்." கோடியில் வாங்கி.. கும்மாளம் அடித்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி  பல பேரிடம் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிரமான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு பகுதியைச் சார்ந்தவர் கார்த்திகேயன். இவர் ராமநாதபுரத்தைச் சார்ந்த ரகு என்பவரிடம் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பன்னிரண்டு லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். ரகுவிற்கு கார்த்திகேயன் மீதிருந்த நம்பிக்கையால் தனது  குடும்பத்தினரிடமும் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கி இருக்கிறார்.

அந்தப் பணத்தை எல்லாம் ரகு கார்த்திகேயனிடம் அரசு வேலைக்காக கொடுத்துள்ளார். அனைவரிடமிருந்தும் பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் தலைமறைவாக இருந்துள்ளார். ரகு அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதரைத் தொடர்ந்து அவர் காவல்துறையிடம் மீது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை செய்த காவல்துறை தலை மறைவாகயிருந்த கார்த்திகேயனை கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய்  மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poilice arrested a man for job scam he ran away with more than one crore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->